Thursday 28 May 2015

 சுழலும் ஏர் பின்னது உலகம்

கல்யாணம், காது குத்து, திருவிழா, திரைப்படம் ரிலீஸ் என எல்லாவற்றுக்கும் பிளக்சும், போஸ்டரும் அடித்து பேருவகை எய்தும் நம் சமூகம் ஒரு போதும் தனக்கு உணவு அளிக்கின்ற விவசாயியின் முகத்தினை ஒரு போதும் பார்த்ததில்லை. ஏனெனில் நம்மவர்களை பொறுத்தவரை கடை வியாபாரிகளோடு அவர்கள் உறவு முடிந்து விடுகிறது.


ஜப்பானில் உள்ளூரில் விளைவிக்கப்படும் காய் கறிகள் அந்த ஊரில் உள்ள அங்காடிகளிலேயே விற்க முடியும். இந்த அங்காடிகளில் உள்ளூர் விவசாயிகள் பதிவு செய்து வைத்து விடுகிறார்கள். அவர்களது புகைப்படமும், அவர்களது தோட்டம் பற்றிய விவரமும் புகைப்படங்களாக கடைக்காரர்களிடம் இருக்கும். அந்த விவசாயி காய் கறிகள் கொண்டு வந்து கொடுக்கும் தினம் அவர்களது புகைப்படத்துடன் கூடிய விவரங்களை காய் கறிகளின் அருகில் வைத்து விடுகிறார்கள். காய்கறிகளுக்கான குறைந்த பட்ச விலையினை விவசாயிகளே நிர்ணயிக்கிறார்கள். இதனால் அடிமாட்டு விலைக்கு அவர்களது பொருட்களை வஞ்சிக்கும் இழி நிலை ஓரளவிற்கு ஒழிக்கப்படும். 


Inagaye Stores, Yamazaki, Nodashi, Japan.


Inagaye Stores, Yamazaki, Nodashi, Japan.

மற்றொரு புறம், அன்றாடம் பறித்த சுத்தமான, மலர்ச்சியான, காய்களும் கீரைகளும் உடனுக்குடன் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கின்றது.  

இதைப் போல் நமது சிற்றூர்களிலும், சிறு நகரங்களிலும் ஒவ்வொரு கடைக்காரமும் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு  அவர்களது தகவல்களோடு விற்பனை செய்யலாம். காய் கறிகளை அவர்களது புகைப்படத்துடன் விற்பனை செய்வதன் மூலம் அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கலாம். விவசாயிகளே தங்கள் விளை பொருட்களை விலை நிர்ணயம் செய்து அதில் குறிப்பிட சதவிகிதத்தினை கடைக்காரர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

இதனால் இடைத் தரகர்களின் தொல்லை ஒழிவதோடு, விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் அவர்களது ஊரிலேயோ அல்லது அருகில் உள்ள சிறு நகரங்களிலேயோ  அவர்களின்  வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. 

இனியாவது விவசாயிகளை அங்கீகரிப்போம். 
(அடுத்த பதிவில் ஜப்பானில் உள்ள  அரிசி எடுக்கும் ஏடிஎம் இயந்திரங்களை பற்றி எழுதுகிறேன்)

No comments:

Post a Comment