Tuesday 26 May 2015

இயற்கையின் காதலர்கள் - கரிம விவசாயம் (Organic Forming)

இயற்கை அறிவியலில் மிகுத்த அறிவினை கொண்ட பழுத்த மனிதர்கள் எந்த பகட்டும் இல்லாமல்,  எளிய தோற்றத்தில் வலம் வருபவர்கள் நிறைய பேரை நீங்கள் கொங்கு நாட்டில் பார்க்க முடியும். அப்படி ஒருவராகத்தான் இயற்கை வேளாண் ஆலோசகரும், விவசாயியுமான திரு சுவாமியப்பன்அவர்களை பார்க்கிறேன். இவரை  இயற்கை ஆய்வாளர் நம்மாழ்வாரின் பசுமைகரங்கள் அமைப்பின் மூலம் அறிமுகப்படுத்திய  கோபி செட்டிபாளையம் திருமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி.

நொய்யல் ஆற்றில் சாயப் பட்டறைகளின் கழிவுகள் கலந்து இன்று இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இந்த அழிவினை தடுக்கும் பொருட்டு  2009 ஆம் ஆண்டு முதல் சட்டையே அணியாமல் தன்னால் இயன்ற பிரச்சாரத்தினை இயற்கையினை காக்கும் பொருட்டு சட்டை அணியா சுவாமியப்பன் அவர்கள் செய்து வருகிறார்.

உயிரின பண் மையம் அல்லது பல்லுயிர் பெருக்க நுட்பவியல் பண்ணையம் என்ற தன்னுடைய மாதிரி திட்டத்தினை பல்வேறு இடங்களில் செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்

மனித வள ஆற்றலை எப்படி திறன் மிக்க வகையில் விவசாயத்தில்  பயன்படுத்தலாம் என தெளிவாகவும், எளிமையாகவும் விளக்குகிறார்

நேரம் கிடைக்கும் போது இங்கு இணைத்துள்ள காணொளியினை பொறுமையாக கேளுங்கள்


1.  நீர் மேலாண்மையில் பனைமரங்களின் முக்கியத் துவம்

2. ஆல், வேல், இலுப்பை, அத்தி மரங்களின் மகத்துவம்,

3. கால்நடை,மீன் வளர்ப்பு இவைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் 
4. எளிய வாழ்க்கையின் மூலம் எப்படி சுற்றுப் புற சூழலை மாசு சீர்கேட்டில் இருந்து தடுப்பது

போன்றவற்றினை தனது அனுபவத்தின் மூலம் விளக்குகிறார்.

இவரது கருத்து பலருக்கு ஒத்து போகாமல் இருக்கலாம். ஆனால் அவர் சொல்லுகிற செய்திகளின் பின்னால் உள்ள உண்மையினை நாம் ஒரு போதும் நிராகரிக்க முடியாது.

 வெறுமனே இயற்கை விவசாயம் குறித்து பிரச்சாரம் செய்யாமல் அதனை களத்தில் செய்து காட்டியும் வரும் இவர் போன்றவர்களே இன்றைய இளைஞர்களின் ஆதர்சனம் என எண்ணுகிறேன்.

(இவரது இயற்கை விவசாயம் பற்றிய சொற்பொழிவுகள் யூடியூப்பில் கிடைக்கிறது).



இயற்கை வேளாண் ஆலோசகர் திரு. சட்டையணியா சாமியப்பன்



 நன்றி:
"கிராமத்தினை நோக்கி" என்ற நிகழ்வினை ஆவணமாக்கிய விழிகள் அமைப்பிற்கு மிக்க நன்றி.




No comments:

Post a Comment