Saturday 13 June 2015


விதை உருண்டைகள் - Seed balls

இன்று செடி விதைகள் வாங்க இனகாயா (Inagaye) அங்காடிக்கு சென்றிருந்தேன். காய் கறி, பூச்செடிகளின் விதைகளை பாக்கெட்டில் விற்கிறார்கள். பாக்கெட்டின் பின்புறம் எந்த பகுதியில் இருந்து விதை கொண்டு வரப்பட்டது என்ற தகவலும் தரப்பட்டுள்ளது.

 விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள்

  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள்

  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள், விதைகளை எப்படி நடவு செய்யலாம் மற்றும் பிற தகவல்களை காணொளியாகவும் சிறிய டிஜிட்டல் டிவியில் காண்பிக்கப்படுகிறது.

 விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை பைகள்

இதில் என்னை அதிகம் கவர்ந்தது. நன்கு செய்நேர்த்தி செய்த  விதைகள் அப்படியே களிமண், மற்றும் வைக்கோல் மற்றும் இதர நுண் ஊட்டச் சத்துகள் கலந்த உருண்டைகளாக (Seed Balls) பேக்கிங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 


விதை உருண்டைகள்

 விதை உருண்டைகள்


விதை உருண்டைகள்
தகவல் விபரங்கள்

 ஸ்ட்ராபெர்ரி செடி  விதை உருண்டைகள்

ஒவ்வொரு உருண்டையிலும் நிறைய விதைகள் இருப்பதால் வளர்ந்த பின் நிறைய செடிக் கன்றுகள் கிடைக்கும். ஓரளவிற்கு வளர்ந்தவுடன், கன்றுகளை பிரித்து தனித்தனியே நடவு செய்யலாம். அட்டையின் பின்புறத்தில் எப்படி நடவு செய்ய வேண்டும். செடிக்கு தேவைப்படும் தட்ப வெப்ப நிலை, எவ்வளவு காலம் செடி வளர எடுத்துக் கொள்ளும்,  என எல்லா தகவலும் தரப்பட்டுள்ளது. 

இவை நில உருண்டைகள் (earth dumplings) என்னும் முறையில் தயாரிக்கப்படுபவை. இம்முறையினை  ஜப்பானிய இயற்கை விவசாயத்தின் முன்னோடியான மசினோபு புகோகா (Masanobu Fukuoka) அவர்கள் இந்த உத்தியினை அறிமுகப்படுத்தி மிகப் பெரிய அளவில் ஜப்பானில் தரிசு நிலங்களில் செடிகளை அறிமுகப் படுத்தினார்.




மசினோபு புகோகா-சன் இயற்கை விவசாய புரட்சியாளர்

 விதை உருண்டையிலிருந்து முளையும் செடிகள்

விதை உருண்டையிலிருந்து முளையும் செடிகள்

இதே போல நமது பாரம்பரிய நாட்டுரக செடி விதைகளை நேர்த்தி செய்து விதை உருண்டைகளாக பேக்கிங் செய்து விற்கலாம். தற்போது நகரங்களில் மாடி தோட்டங்கள் மற்றும் வீட்டு தோட்டங்கள் பெருகி வரும் சூழலில் இது மிகவும் எளிதான முறையில் செடிகள் வளர்க்க உதவும். மேலும் அழிந்து வரும் நாட்டு ரக செடி விதைகளை காப்பாற்றி மக்களுக்கு கொண்டு செல்லலாம்.

 தற்போது பன்னாட்டு விதை நிறுவனங்கள் தங்களது மரபணு மாற்றம் செய்த விதைகளை பரவலாக விற்பனை செய்து வருகிறது. இத்தையக சூழலில் இது போன்ற உத்திகள் நம் மண்ணின் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பயன் அளிக்கும்.   

விதை உருண்டைகளை வெளியில் இருந்து பார்க்கும் வண்ணம்   குமிழ்களில் அமைக்கப்பட்ட இந்த உறைகள் வித்தியாசமாக மக்களை எளிதில் சென்றடையும்.  இந்த விதை உருண்டைகளை கிராமப்புற பண்ணைகளில் தயார் செய்து  சிறு மற்றும் பெரு நகரங்களுக்கு விற்பனை செய்யலாம். 


No comments:

Post a Comment