Sunday 10 January 2016

ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது -10

(கேடில் விழுச் செல்வம் கல்வி)


"ஒரு நாட்டின் அரசு  தனது குடிமக்களுக்காக ஒரு மைல் தொலைவு கூடுதலாக பயணிக்கும் போது நான் ஏன் அது போன்ற தேசத்தில் இறக்க கூடாதுஎன ஜப்பானை பற்றி வெளிநாட்டவர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு எல்லோருடைய புருவத்தையும் உயர்த்தியுள்ளது.  அப்படி என்ன செய்தி அது.

ஜப்பானின் கொக்கைதோ (Hokkaido) தீவு ஒன்றில் செயலிழந்தது என முடிவெடுக்கப்பட்டு, மூடப்படும் சூழலில் இருந்த இரயில் நிலையத்தில் அங்கு தினமும் வரும் ஒரே ஒரு மாணவிக்காக அதன் வழியே செல்லும் இரயில்    தினமும்  நின்று செல்கிறது என்பதுதான் அந்த செய்தி. வெகு காலத்திற்கு முன்பே ஜப்பானிய ஊடகங்களால் பேசப்பட்ட என்றாலும் ஒரு சீன நிறுவனத்தின் (CC TV News0 சமீபத்திய முகநூல் செய்தி பகிர்வினால் இந்த செய்தி தற்போது உலகின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

நான் சொல்ல வந்த செய்திக்கு முன் இந்த கொக்கைதோ தீவினை பற்றி ஒரு சில வரிகள் சொல்லி விடுகிறேன்

ஜப்பானின் வடக்கு எல்லையில் உள்ளது கொக்கைதோ தீவுஜப்பானின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது கடுமையான பனி பொழிவு உள்ள பிரதேசம் இதுபனி காலத்தில் இந்த பனி பொழிவினை கண்டு அனுபவிக்க ஜப்பானிய மக்களின் சுற்றுலா விருப்பங்களின் இதற்கென்று எப்போதுமே தனி இடம் உண்டு

நிலப் ப‌ரப்பில்  ஜப்பானில் உள்ள தீவு கூட்டங்களில் இரண்டாவது மிகப் பெரிய தீவு கொக்கைதோ. உலக அளவில் உள்ள‌ தீவுகளை ஒப்பிடும் போது அயர்லாந்து நாட்டினை விட 3.6% சதவிகிதம் பரப்பில் சிறியது. ஜப்பானின் வடக்கு எல்லையில் உள்ள இந்த தேசம் கடலால்  துண்டிக்கப்பட்டு இருந்தாலும்  ஜப்பானின் வடக்கு எல்லை நிலப்பரப்பில் இருந்து 53.85 கி.மீ தொலைவிற்கு கடலுக்கு அடியில் நிலவறை (tunnel) மூலம்  செய்கான் குகை இரயில் மார்க்கம் (青函トンネル Seikan Tonneru) வழியாக‌  ஜப்பானின் முக்கிய நிலப்பரப்போடு (main land) இணைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு கீழே 100 மீட்டர்  ஆழத்தில் 23.3 கி.மீ தொலைவிற்கு செல்லும் இந்த தடம் உலகின் ஆச்சரியமான இரயில் வழி தடங்களில் இதுவும் ஒன்று. 

 இந்த கொக்கைதோ தீவில் உள்ள ஒரு சிறு இரயில் நிலையம்தான் காமி-சிரதாகி (Kami-Sirataki). கொக்கைதோ தீவின் மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள அபசிரி (Abasiri) இரயில் நிலையத்தில் இருந்து தீவின் மத்திய பகுதியில் உள்ள அசாகிகவா வரை செல்லும் செய்கொகு இரயில் தடத்தில் காமி-சிரதாகி இரயில் நிலையம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டு வந்த இரயில் பின்னர் பயணிகள் வரத்து குறைந்து கொண்டே செல்ல‌ இனி இந்த நிலையம் செயலிழந்தது என  ஜப்பான் இரயில்வே நிறுவனத்தினரால் கருதப்பட்டு இனி இங்கு இரயிலை நிறுத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

காமி-சிரதாகி இரயில் நிலையம்

ஆனால் ஆச்சரியமாக‌ இந்த இரயில் நிலையத்தில் ஒரு பள்ளி மாணவி தொடர்ந்து இந்த நிறுத்தத்தில் ஏறுவதை கவனித்த இரயில் ஓட்டுநர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க, இந்த மாணவியின் கல்வி நலனுக்காக இரயில் காமி-சிரதாகி  இரயில் நிலையத்தில் நின்று செல்ல முடிவெடுக்கப்பட்டது. 

அதன் படி அம்மாணவி காலையில்   பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து திரும்பும் போதும் என இரு முறை மட்டும் இந்த ரயில் நிலையத்தில்  
வண்டி நின்று செல்கிறது. அம்மாணவி  பள்ளி படிப்பினை முடித்து பின்னர் அருகில் உள்ள நகரின் கல்லூரிக்கு பட்ட படிப்பு சென்று கொண்டு  இருந்ததால் அவருக்காக இன்னும் இரயில் நிறுத்த சேவை தொடர்கிறது. எதிர் வரும் மார்ச் மாதத்தோடு அம்மாணவியின் கல்லூரி படிப்பு முடிவடைந்த பின் இந்த இரயில் நிலையத்தில் இரயில் நிற்காது என ஜப்பானிய இரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது



photo courtesy: Twitter @foxnumber6


காமி-சிரதாகி  இரயில் நிலையத்தின் கால அட்டவணை (புகைப்படம் நன்றி; விக்கிபிடியா)

த‌ன் குடிமக்களில், ஒருவரின் கல்விக்காக லாப நோக்கின்றி செயல்படும் நிறுவனத்தை வைத்திருக்கும் ஜப்பான் நாடு குறித்து இந்த கட்டுரையில் முதல் பத்தியில் வெளிநாட்டவர் கூறிய‌ கருத்து இனி ச‌ரியானதென்று நீங்கள் நிச்சயம் ஒத்து கொள்வீர்கள்.

இதே போல் மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவம்  தனி ஒரு மாணவருக்காக  பிரித்தானியாவில் நடந்துள்ளது. இங்கு ஸ்காட்லாந்து (Scotland) தேசத்தின் அவுட் ஸ்கெரிஸ் (Out Skerries) தீவில்    அரோன் (Aron) என்னும் பத்து வயதுள்ள ஒரே மாணவனுக்காக இங்குள்ள‌ பள்ளி இயங்குகிறது.  இந்த‌ ஒரே ஒரு மாணவனுக்காக வருடம் ஒன்றிற்கு பிரித்தானிய‌ அரசு இந்த பள்ளிக்கு 75,000 பவுண்டு செலவு செய்கிறதுஇப்பள்ளியில் சில காலம் வரை நிறைய மாணவர்கள் படித்து கொண்டு இருந்தனர். ஆனால் நாளடைவில் அம்மாணவர்கள் அருகில் உள்ள நிலப்பரப்பான செட்லாந்து நகருக்கு சென்று விட்டனர்தற்போது அரோன் மட்டுமே இங்கு பயில்வதால் அவருக்கு ஆசிரியர்களின் கவனிப்பு நிறைய கிடைக்கிறதுஆனால் ஆரோனுக்கு பிடித்த கால்பந்து விளையாட்டு விளையாடத்தான் நண்பர்கள் இல்லை. 


மேற்சொன்ன இரண்டு சம்பவங்கள்   நமக்கு உணர்த்து உண்மை ஒன்றுதான், பள்ளி கல்விக்காக வளர்ந்த நாடுகள் அதிமாக‌ பிரயத்தன படுகின்றன. ஏன், பள்ளி கல்வியில் இவ்வளவு சிரத்தினை எடுத்து கொள்கிறார்கள்?  ஒரு தேசம் அந்த மாணவனுக்காக எல்லா நிலையிலும் உடன் நிற்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த குடிமகன்களை பெற முடியும் என  எண்ணுகிறது.

சம கால சூழலில் நம் தமிழகத்தில் பார்க்கும் போதுஇரண்டு செய்திகள் நமக்கு மன வலியை தருகிறதுஒன்று, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறார்கள் என தமிழகத்தில் பள்ளிகளை அரசு மூடுவது .  மற்றொன்று, சரியான போக்குவரத்து சூழல் இல்லாததால் இன்னும் பல மாணவர்கள் கல்வி கூடங்களுக்கு செல்ல இயலாத நிலை உள்ளது

மனதை நெருடும் மற்றொரு விசயம்நன்கு இரயில் தடங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு குறைவான பேருந்து சேவைகளே உள்ளது. ஆனால் பெரும்பாலும் வருமானம் தரும் நிலையங்களில் மட்டும் இரயில்கள் நின்று செல்வதால் அந்த மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே உள்ளது. இதனால் பேருந்துகளின் படிகட்டுகளில் தொங்கி கொண்டும், பேருந்தின் மீது ஏறிக் கொண்டு செல்லும் அவல நிலையியினை இன்றும் பார்க்க முடிகிறதுமக்கள் தொகை மிகுதியான இந்தியா போன்ற நாடுகளில் பொதுமக்களுக்கான போக்குவரத்து திட்டங்கள் இன்னும் முன்னேற்றப்படுத்த பட வேண்டும், சாலை வழி போக்குவரத்தில் பேருந்து வசதிகளோடு இரயில் போக்குவரத்தையும் எதிர் கால நோக்கில்  நாம் விரிவு படுத்த வேண்டும்.

ஜப்பானின் காமி-சிரதாகி இரயில் நிலையம் போன்று இயக்கப்பட முடியாத சூழலில் உள்ள தமிழக‌ இரயில் நிலையங்களின் அருகில் இருந்து பல ஆயிரம் மாணவர்கள் சிறு நகர பள்ளிகளுக்கு செல்ல ஏதுவாக அவற்றை மீண்டும் இயக்கலாம்மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு பேருந்தினை காட்டிலும் இரயில் சேவை மிக பலன் தரவல்லது.

தற்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண சேவை தருகிறது. இதைப் போலவே மத்திய நடுவன் அரசிடம் பேசி, இரயில் நிலையம் இருக்கும் பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச கட்டணமாக பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்யலாம். இதற்கான தொகையினை தமிழக அரசு மத்திய அரசிற்கு செலுத்தலாம். அல்லது மத்திய அரசே இலவச சேவையினை மாணவர்களுக்கு வழங்கலாம்.

இவையெல்லாம் கற்பனை என தோன்றினால், தற்போது பள்ளிக்கு அருகில் அரசு பேருந்துகள் வேண்டா வெறுப்புடன் நின்று செல்கிறது. காரணம்  மாணவர்களை ஏற்றி சென்றால் அரசுக்கு வருமானம் வராது என்ற தட்டையான காரணம். அரசுக்கு வருமானம் வரும் பல நல்ல திட்டங்களை வேண்டும் என்றே தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து விட்டு இது போன்று மக்கள் நல விசயங்களில் அரசுதுறை ஊழியர்கள் செயல்படும் நிலை இனியேனும் மாற்றப்பட வேண்டும்.


தமிழக‌  அரசு மதுபானக் கடைகளை நடத்தும் அளவிற்கு வல்லமை இருக்கும் போது அரசு பள்ளிகளை நடத்துவதிலும் அம்மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கும் ஏற்ற  சூழலை ஏற்படுத்தி தருவதில் சுணக்கம் காட்டுவது ஏனோ.


No comments:

Post a Comment