Sunday 21 February 2016

ஜப்பானிய மக்களோடு ஒரு நாள் - ஒசிதா நகரம் 


ஜப்பானிய மண்ணில் இருந்து நாம் பெற்றது அதிகம். ஆனால் நாம் அவர்களுக்கும், அங்குள்ள சமூகத்திற்கும் என்ன செய்திருக்கிறோம் என அடிக்கடி ஒரு கேள்வி முழுமதி அறக்கட்டளைக்கு எழுவதுண்டு.

இதற்கான விடை தேடலில் முழுமதியின் முதல் பயணம் கடந்த வருடத்தில் தொடங்கியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மியாகி மாகாணத்தில் மகினோகாமி நகரில் அருகில் உள்ள ஒரு மலைகிராமத்திற்கு கடந்த ஆண்டு சென்று ஓர் இரவு தங்கி அம்மக்களுக்கு இந்திய உணவு சமைத்து அவர்களோடு விருந்துண்டு ஒரு நம்பிக்கையினை கொடுத்து வந்தோம். இது இறுக்கமான ஜப்பானிய சமூக வெளியில் உள்ளே நாம் நுழைவதற்கும், தோழமையுடன் அவர்கள் நம்மை புரிந்து கொள்ளவும் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. அப்போது முழுமதிக்கு அறிமுகமானவர்தான் கோதாமா- சன் (Kodama-san) இவர் யமாகதா (Yamagada) மாகாண சட்ட சபையின் உறுப்பினர். 

அந்த சந்திப்பில் கோதாமா சன்,  குளிர் காலத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவில் (snow fall)  எங்கள் ஒசிதா (Oishida) நகரின் எல்லா போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. உள்ளூர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நீங்களும் இங்கு வந்து தங்கி ஓரிரு நாட்கள் பனியினை விலக்கும் பணியில் ஒத்தாசை செய்தால்  எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கேட்டார்.

மேலும் அவர்களுக்கு நம் தமிழ் கலாச்சார பண்பாட்டினையும் அறிந்து கொள்ளவும் ஆசை எனத் தெரிவித்தார். 

நிச்சயம் வருகிறோம், உங்கள் மக்களுக்கு உதவுவதோடு நாங்களும் அவர்களது பண்பாடுகளை அறிந்து கொள்ள எங்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனச் சொல்லி முழுமதி களத்தில் இறங்கியது.

தோக்கியோவில் இருந்து பத்து குடும்பங்களோடு, இன்னும் சில தோழர்கள் சேர்ந்து கொள்ள யமாகதா மாகாணத்தில் உள்ள ஒசிதா நகரை நோக்கி கடந்த வெள்ளியன்று  பயணத்தை துவக்கினார்கள். ஏறத்தாழ எட்டு மணி நேர பயணம்.

வடக்கு ஜப்பானில் அமைந்துள்ள  யமாசிதா மாகாணத்தில் கிதாமுரா மாவட்டத்தில் உள்ள சிறு நகரமே ஒசிதா. இந்நகரின் வழியாகத்தான் ஜப்பானின் மூன்று பெரிய காட்டாறுகளில் ஒன்றான மொகாமி (mogami) ஆறு ஓடுகிறது. எதோ (Edo) காலகட்டத்தில், இந்த ஆறு வழியாக ஜப்பானில் பிற பகுதிகளுக்கு விளை பொருட்கள் எடுத்து செல்லும் பயணப் பாதையாகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்நகரில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். ஜப்பானின் தலைநகராகிய தோக்கியோவை ஒப்பிடும் போது இங்கு நிலவும் கடுமையான பருவ நிலை வேறுபாடு கோடை காலத்தில் அதிகமான வெம்மையையும், குளிர் காலத்தில் உறை பனி கொண்ட பனி பொழிவும் அதிகமாக இருக்கும். 

கடுமையான பனிப் பொழுவின் போது நகரின் முக்கியமான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் நான்கு அடிக்கும் மேல் மூடி விடும். இத்தனை பனி பொழிவினையும் அம்மக்களால் அகற்றுவது மிகவும் கடினம். 
ஆகையால்தான் நமது முழுமதி அறக்கட்டளையின் உதவியினை கேட்டுள்ளார்கள். 

நம் முழுமதி நண்பர்கள் அனைவருக்கும் ஒசிதா நகரில் தங்கும் ஏற்பாடுகளை உள்ளூர் நகர் மன்றம் மூலம் செய்து கொடுத்திருந்தனர். பனி நிறைந்த பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும், எவ்வாறான காலணிகள் அணிய வேண்டும் என பாதுகாப்பு பற்றி நண்பர்களுக்கு பயிற்சி கொடுத்ததால் இப்பணியின் மூலம் புதிய அனுபவத்தினை பெற முடிந்தது.

நம் நண்பர்களோடு, இப்பணியில் உள்ளூரில் வசிக்கும் 80, 90 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டது மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. 

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பனி பொழிவினை அகற்றும் பணி உள்ளூர் மக்களோடு செவ்வனே நடந்து முடிந்தது. சனிக் கிழமை அன்று உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தினை அரங்கேற்றினர். பின்னர் அனைவருக்கும் விருந்து உபசரித்து . அடுத்த வருடம் மீண்டும் வர வேணும் என்ற அன்பு கட்டளையோடு, பிரியா விடை அளித்தனர்.

ஆகையால் இம்முறை நமது முழுமதி அறக்கட்டளையின் உதவியினை கேட்டுள்ளார்கள். 

நம் முழுமதி நண்பர்கள் அனைவருக்கும் ஒசிதா நகரில் தங்கும் ஏற்பாடுகளை உள்ளூர் நகர் மன்றம் மூலம் செய்து கொடுத்திருந்தனர். பனி நிறைந்த பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும், எவ்வாறான காலணிகள் அணிய வேண்டும் என பாதுகாப்பு பற்றி நண்பர்களுக்கு பயிற்சி கொடுத்ததால் இப்பணியின் மூலம் புதிய அனுபவத்தினை பெற முடிந்தது.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பனி பொழிவினை அகற்றும் பணி உள்ளூர் மக்களோடு செவ்வனே நடந்து முடிந்தது. சனிக் கிழமை அன்று உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தினை அரங்கேற்றினர். இந்நகரின் மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நம் நண்பர்களை வெகுவாக பாராட்டினர். நம் தமிழ் கலாச்சாரத்தினை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டனர்.

 பின்னர் அனைவருக்கும் விருந்து உபசரித்து . அடுத்த வருடம் மீண்டும் வர வேணும் என்ற அன்பு கட்டளையோடு, பிரியா விடை அளித்தனர்.

முழுமதி நண்பர்களின் சேவையினை யமாகதா மாகாணத்தில் இருந்து வெளி வரும் ஜப்பானிய செய்திதாளான யமாகதா- சிம்புன் இதழிலில்  பாராட்டி கவுரவித்தனர். ஒசிதா நகர மக்களின் அன்பினை பெற முழுமதி அறக்கட்டளைக்கு வாய்ப்பளித்த கோமதா சன் அவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரும் நன்றிகள்.

தொடந்து ஜப்பானிய மக்களின் கலாச்சார பண்பாடுகளுடன் பயணிப்போம்.

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள்.

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள் சிறப்பு மர காலணிகளுடன்.

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள் 

 
ஒசிதா நகர மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்துடன் விருந்தளிப்பு

முழுமதி நண்பர்கள் பனிப் பொழிவினை அகற்றும் பணி பற்றிய செய்தி யமாகதா சிம்புன் செய்திதாளில் வந்த செய்தி

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள் 

  

No comments:

Post a Comment