Monday 7 March 2016

உலக மகளிர் தினம் (March-8, International Women Day)


சாலையோர நடைபாதைகளில் வைக்கப்படும் சிலைகள் அழகியலோடு ஒரு தத்துவத்தையோ அல்லது கதையோ சொல்வது போல் இருக்கும். அதற்காகவே பொறுமையாக இந்த சிலைகளை நின்று தரிசனம் செய்வேன்.

அன்றைய நாளில் வழக்கமான வார இறுதிக்காக ஊர் சுற்றும் வேலையில்தான் அந்த சிலையினை பார்த்தேன். 

உழைத்த‌ களைப்பில்லாமல், உறுதியோடு நிற்கும் ஆகிருதியான இரு பெண்களின் உருவம்  அது.  ஒரு பெண்ணின் சிலையில் மார்போடு பதிக்கப்பட்ட பால் புட்டி, குழந்தைக்கு பாலூட்ட கூட நேரமில்லாமல் வேலை நிமித்தம் பரபரப்போடு ஓடித் திரியும் நம் ஊர் தாய்மார்களை நினைவூட்டுபவை.  மற்றொரு பெண்ணின் உடலில் கழுத்தில் தொங்கவிடப்பட்ட தட்டச்சு இயந்திரம், தொலைபேசி உள்ளிட்ட இயந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இது கீழ் மட்ட அளவில் பணிபுரியும் பெண்கள் எவ்வாறு பணிக்கு நிகரான ஊதியம் வழங்கப்படாமல் சுரண்டப்படுகிறார்கள் என்பது பற்றிய புள்ளி விபர தகவகளோடு பதியப் பட்ட விபரங்கள் என இச்சிலை அதிகார வர்க்கத்தை, ஆணாதிக்க சமூகத்தினை நிறுத்தி கேள்வி கேட்க செய்பவை.  


பெண்களின் உழைப்பு சுரண்டலை நிர்வாணப்படுத்துவதாய் நிற்கும் இந்த சிலை பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் யுரோபா விடுதி அருகில் உள்ள வணிக வளாகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையினை லோயிசு வால்சு (Louise Walsh)  என்பார் 1992 ஆம் ஆண்டு வடிவமைத்துள்ளார்.  இச்சிலைக்கு  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker)  என பெயரிட்டுள்ளனர்.

தங்கள் உழைப்பால், சீரிய சிந்தனையால் இச்சமூகத்தினை தாங்கும் எல்லா மகளிருக்கும் எமது இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .

பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .

பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .







பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .



1 comment: