Saturday 17 September 2016



எப்பொழுதாவது தமிழ் படங்கள் எரிச்சலடையச் செய்யும் போது   எனது அடுத்த விருப்பு தேர்வு என்பது மலையாளப் படங்களே.ஆனால் எந்த படங்களை பார்ப்பது என்ற குழப்பம் எப்போதுமே இருக்கும்.
அவ்வாறான சூழலில் விமான பயணங்களின் போது என்னென்ன படங்கள் இருக்கிறது என குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன். ஏனெனில் இது போன்ற பயணங்களில் தேர்ந்தெடுத்த நல்ல படங்களை அவர்கள் தருவதால் மொழி தெரியாத எனக்கு நல்ல படங்களை பார்க்கும் அரிய வாய்ப்பு என கருதி தவற விடுவதில்லை.
சமீபத்திய விமான பயணத்தில்  "நார்த் 24 காதம்" (North 24 Kaadtham) என்னும் மலையாளப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இப்படத்தில் பிரபலை மலையாள இயக்குநர் பாசில் அவர்களின் புதல்வர் நடிகர் பதக் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஒரு பயணக் கதையினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தன்னை சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லாமல், தன்னை பற்றி மட்டுமே அதீத அக்கறை கொள்ளும் அதி சுத்த மனோபாவம் கொண்ட ஒரு இளைஞனை எவ்வாறு மனம் மாறுகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரிக் கதை. கதாநாயகனின் இரயில் பயணத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு சக பயணியின் வீட்டிற்கு செல்லும் சூழல் நேரிடுகிறது. ஆனால் அந்த நேரம் பார்த்து கேரளாவில் திடீரென பந்த் நடக்கிறது.
வழமையான பந்த் நடைபெறும் காலத்தில் பேருந்து வசதி இல்லாமல் கேராளாவின் ஒரு கடைக் கோடியில் இருக்கும் அந்த சக பயணியின்  கிராமத்திற்கு செல்வது எத்தையக கடினம் என்பதை தனது பயணத்தின் வழியே உணர்கிறான். அவன் பார்க்கிற சக மனிதர்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களின் அன்பான உபசரிப்பு ஆகியவை அவன் பார்த்திராத ஒரு எதார்த்த உலகை தரிசிக்கிறான். மெல்ல அவனுக்குள் அந்த மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். இந்த பயணம் ஒரு புத்தனைப் போல் அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களை பற்றி படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பயணத்தில் இறுதியில் அவனுக்குள் ஏற்பட்டிருக்கும் பெரிய மனமாற்றத்தை முன்னிறுத்தி சமூகத்தை ஏன் படிக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லும் இந்த படம் 2013 ம் ஆண்டு இந்தியாவின் தேசிய விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்தப் படத்தில் பதக் பாசிலின் இயல்பான நடிப்பு அப்படியே  என்னைக் கட்டிப் போட்டு விட்டது.
பதக் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்துள்ள‌ "மகேசின்டெ பிரதிகாரம்" என்னும் மலையாளப் படத்தில் வரும் பாடலை நேற்று  நண்பர் டான் அசோக்கிற்கு பகிர்ந்திருந்தார். பதக் நடித்திருக்கும் படம் என்பதால் உடனே கேட்டுவிட ஆர்வம் மேலிட்டது. நேற்று மட்டும் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது.
"மல மேலே திரி வச்சு
பெரியாறின் தலையிட்டு
சிரி தூகும் பெண்ணள்ளே இடுக்கி.."
அற்புதமான இசை. ரம்மியமான கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் சூழலை அழகாய் படம் பிடித்துக் காட்டும், அற்புதமான காட்சி கோர்வை.

நேரம் கிடைக்கும் போது அவசியம் பாருங்கள்.

பிரேமம் படத்தில் வரும் "ஆலுவா புழையுட தீரத்து", "தெளிமானம் மழு வில்லின் நிறமணியும் நேரம்" போன்ற‌ பாடல்கள் இதற்கு முன் என்னை ஆட்டி வித்தவை. தற்போது அந்த வரிசையில் இந்த பாடல் இடம் பிடித்துள்ளது.

இப்பாடலை பரிந்துரைத்த‌ நண்பர் டான் அசோக்கிற்கு நன்றி.


No comments:

Post a Comment