Sunday 2 October 2016

காந்தி ஜெயந்தி


கொரியாவில் பணி புரிந்த காலத்தில் டாக்சியில் பயணம் செய்யும் போது டாக்சி ஓட்டுநர்கள் தவறாமல் என்னிடம் சொல்லும் தகவல். காந்தி, தாகூரை தெரியும் என்பதே. எப்படி என ஆச்சரியமாக கேட்டால், அவர்களுக்கு பாடப் புத்தகத்தில் இவர்களை பற்றிய தகவல்கள் உள்ளதென ஆச்சரியமூட்டுகிறார்கள்.

அதே போல ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் போது காந்தியை பற்றி விரிவாக பேசுகிறார்கள். காந்திய சிந்தனைகளை பற்றி புலகாங்கிதம் அடைகிறார்கள். 

அவ்வளவு ஏன், காந்தியைப் பற்றிய உயர்வான எண்ணமே நம்மை ஆட்டிப் படைத்த பிரித்தானிய நாட்டின் பெரியவர்களிடமும் பேசும் போதும் வெளிப்படுகிறது.

எதிரிகளும் இவர் பெயரை மிக கண்ணியத்தோடு உச்சரிக்கின்றனர்.

எல்லைகளை தாண்டி எல்லோரையும் இந்த கிழவன் அகிம்சை என்னும் ஆயுதத்தால் கட்டி போட்டுள்ளான் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.


காந்தி நீர் ஒரு அன்பு அரக்கரய்யா..


Selfie with Mahatma at Madame Tussauds London

No comments:

Post a Comment