Saturday 3 December 2016

"மழலை இனிது" குறும்படம்

மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டே பணிச்சுமைக்கு இடையிலும் "மழலை இனிது" என்னும் குறும்படத்தை வெளியிடும் பிரியத்திற்குரிய நண்பன் கோபிநாத்திற்கு (Gopinath Mohanrao)  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

"மழலை இனிது" குறும்படத்தின் டிரைய்லர் இன்று வெளி வந்துள்ளது.
பளிச்சுன்னு துடைச்சு வச்ச கண்ணாடி மாதிரி நல்லா வந்திருக்கு. அருமையான இசைப் பிண்ணனி, காட்சிக் கோர்வைகள் என பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலைக்கு போகும் பெற்றோர்களின் பிள்ளைகள் எப்போதுமே தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அம்மாக்கள் வேலை விட்டு வரும் வரை அண்டை வீட்டாருடனோ அல்லது தெருவில் நண்பர்களுடனோ தங்கள் பொழுதை கழிக்க வேண்டும். அதுவும் தாத்தா, பாட்டிகள் இல்லாத நகர் புற சூழல்களில் வளரும் குழந்தைகளின் உலகம் கதைகளற்ற தனிமைக் கூட்டிலேயே தங்கி விடுகிறது. என் பால்ய வயதை நான் இவ்வாறே கடந்து வந்திருக்கிறேன்.

பணிச்சுமையை தலையில் கட்டிக் கொண்டு ஓடும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, அன்பின் தேவையினை சொல்லும் படமாக இருக்கும் என்பது என் ஊகம்.

மழலை இனிது தலைப்பை போலவே குறும்படம் நிச்சயம் எல்லோரின் மனசையும் கொள்ளை கொள்ளும்.

மழலை இனிது குறும்படத்தில் பணியாற்றிய அனைத்து நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

உங்கள் நண்பர்களுக்கு குறும்படத்தின் டிரையிலரை பகிறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


  
இக்குறும்படத்திற்கு பிறகு விரைவில் வெள்ளித் திரையில் வெற்றி பெற வாழ்த்துகள்.



No comments:

Post a Comment