Wednesday 11 October 2017

கேள்வி 1: கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் மனிதருக்கு பரவுகிறது. அப்படி எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு முதன் முதலில் இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது?

பதில்: வைரஸ் காய்ச்சல் என்பது பல நூறு வருடங்களாக மனிதர்களை தாக்கி வருகிறது. இது எதோ சில வருடங்களுக்கு முன்பு வந்ததைப் போல பலரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த அறியாமையைத்தான் ரீலர் கும்பல் பன்னாட்டு சதி, இலுமினாட்டி சதி என்ற மாயையினை மக்களிடம் அள்ளித் தெளிக்கிறார்கள்.
இன்றை நவீன விஞ்ஞான மருத்துவத் துறையில் இருக்கும் நவீன வசதிகள் (நுண்ணோக்கிகள், பகுப்பாய்வு வேதி முறைகள், நுணர்விகள்) அன்றைய கால கட்டத்தில் இல்லாததால் அதனை ஏறத்தாழ ‘மர்மக் காய்ச்சல்’ என்றே புழங்கி வந்துள்ளனர். இதற்கு நல்ல உதாரணமாக பல நூறு வருடங்களுக்கு முன்பே பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்த ‘பிளேக்’ நோயினைச் சொல்லலாம்.
மனித குல வரலாற்றில் வைரசின் தாக்குதலை வேறு வேறு கால கட்டத்தில் வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மனிதர்களிடையே பூச்சிகளால் ஏற்படும் விசக் காய்ச்சலை சீன மருத்துவ என்சைக்ளோ பீடியாவில் (ஜின் பேரரசு 265 -420 கி.பி) விச நீர் (water poison) என்று குறிப்பிட்டுள்ளார்கள். பின்னர், 1780 களில் ஒரே கால கட்டத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் டெங்குவின் தீவிர தாக்குதல் பரவியுள்ளது. இதனை 1789 ஆம் ஆண்டு பெஞ்சமின் ரஸ் (Benjamin Rush) என்பார் கண்டறிந்து இதற்கு ப்ரேக்போன் பீவர் (breakbone fever) என்று பெயரிட்டார்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் கிருமியியல் துறையில் பல ஆயிரம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களின் அயராத உழைப்பினால் டெங்கு காய்ச்சல் பற்றிய ஆராய்ச்சி வெகுவாக முன்னெடுக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் கண்டறியப்பட்டன.
ஆக, டெங்கு காய்ச்சல் என்பது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்று சொல்லப்படும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. ஆகவே இது சூழலியலில் இருந்து மனிதருக்கு பரவும் தொற்று நோயே.

No comments:

Post a Comment