Friday 15 July 2016

நீரில் வாழும் உயிரினங்களின் மூச்சுத் திறன்

ம் சிறு வயதில் எல்லோரும் நிச்சயம் கிணறு, வாய்க்கால், ஆறு ஆகியவற்றில் நீரில் மூழ்கி மூச்சு பிடித்து விளையாடி இருப்பீர்கள்.

அப்படியே நம் சூழலில் வாழும் பல்வேறு மிருகங்களை ஒப்பிடும் போது, இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மூச்சை உள்ளிழுத்து வைக்கும் திறன் அது வாழும் சூழலுக்கு தக்கவாறு மாறுபடுகிறது.

உதாரணத்திற்கு தரையில் வாழும் மனிதனின் மூச்சை உள் இழுத்து வைக்கும் திறனும், நீரில் வாழும் உயிரினங்களின் திறனும் ஒன்றல்ல. அதுவும் இன்னும் சொல்லப் போனால் மனிதர்களிலேயே ஒரு நிமிடத்திற்கு மூச்சு விடும் எண்ணிக்கை (Respiratory rate) பிறந்த குழந்தைக்கு 30‍-40 ஆகவும், அதே வளர்ந்த பிறகு ஒரு இளைஞருக்கு 12-15 முறையாகவும் இருக்கும். இவை யாவும் இயற்கையின் படைப்புகள் எவ்வளவு நுணுக்கமானது என்பதை உணரை வைக்கிறது.

சரி விசயத்துக்கு வருகிறேன்.

நேற்று பிரித்தானியாவில் உள்ள‌  பிரிஸ்டல் நகரில் (Bristol) உள்ள மிருகாட்சி சாலைக்கு அவந்தியை அழைத்து சென்றபோது பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதில்   நீரில் வாழும் மிருகங்கள் எந்த அளவிற்கு தங்கள் மூச்சை தக்க வைத்துக் கொள்கிறது என்ற தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 a. கடல் பாம்பு 3 மணி நேரம், 30 நிமிடம்

b. ஸ்பெர்ம் திமிங்கலம் ‍ 1 மணி 52 நிமிடம் (பற்கள் உள்ள பாலூட்டிகளில் மிகப்பெரிய விலங்கு இதுதான்)

c. சீல் ஏறத்தாழ 1 மணி நேரம்

d.   பென்குவின் 18 நிமிடம்

e. நீர் யானை ‍ 5 நிமிடங்கள்

இதனை குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்ள,   அவர்களே விளையாட்டு மூலம் தெரிந்து கொள்ள‌  ஒரு மின்னனு கடிகாரம் (Start, Stop button based digital display clock) ஒன்றை வைத்திருந்தனர்.
நாம் மூச்சை எவ்வளவு வினாடிகள்/அல்லது நிமிடங்கள் தம் கட்டி வைத்திருக்கிறோம் என இந்த கடிகாரம் மூலம் எளிதாக கணக்கிட்டு கொள்ளலாம்.

Avanthika, Bristol Zoo, Bristol, UK

Digital clock to demonstrate breath air capacity. Bristol Zoo, Bristol, UK

இவ்வாறான சுவாரசியமான விளையாட்டுகளை நம் ஊர் மிருக காட்சி சாலைகளில் அல்லது பள்ளிகளில் தகவல் பலகை போல் தரலாம்.

நீரில் வாழும் உயிரினங்கள்.

என்னதான் நீருக்குள் இந்த உயிரனங்கள் வாழ்ந்தாலும், ஆக்சிஜனை சுவாசிக்க நீருக்கு மேல் வரும் போது தரையில் வாழும் விலங்கிகளால் ஆபத்துதான். உதாரணத்திற்கு சீல் உயிரனம் மூச்சு விட தரைப்பகுதிக்கு வரும் போது துருவ பனிக் கரடிகளால் வேட்டையாடப் படுகிறது.






No comments:

Post a Comment