Saturday 27 January 2018


ஜப்பானிய அரசின் மிக உயரிய அங்கிகாரமாக கருதப்படும் “ஆர்டர் ஆப் கல்சர் மெரிட்” (Order of Culture Merit) விருதை எங்களது வழிகாட்டியும், ஆசிரியருமான, பேராசிரியர் அகிரா புஜிசிமா பெற்றுள்ளார். இவ்விருது இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா விருதைப் போல ஜப்பான் நாட்டில் மிகப் பெரிய மரியாதைக்குரியது.
ஜப்பானிய பிரதமர் அபே-சன் முன்னிலையில், மரியாதைக்குரிய ஜப்பானிய அரசர் அகிகுதொ- சன் அவர்களிடம் இருந்து நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இவ்விருதை பெற்றுள்ளார். இவ்விருது தரும் விழா தோக்கியோவில் உள்ள ஜப்பானிய அரச குடும்பம் வசிக்கும் அரண்மனையில் நடைபெற்றுள்ளது.
ஜப்பானின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இவரது பங்களிப்பினை கவுரவிக்கும் பொடுட்டு இவ்விருது தரப்பட்டுள்ளது.
குறிப்பாக, பேராசிரியர் புஜிசிமாவின் அறிவியல் நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஜப்பானிய வர்த்தக சந்தையில் 60 பில்லியன் யென்னுக்கு ஜப்பானிய நிறுவனங்கள் இலாபம் ஈட்டியுள்ளன.
தொழில்துறையில் இனி வரும் காலங்களில் இத்துறை இன்னும் பல திசைகளில் பயணிக்க உள்ளது. 
1972 ஆம் ஆண்டு நேச்சர் இதழில் வெளிவந்த ஒளியில் இயங்கும் போட்டோ எலக்ட்ரோ கேட்டலிஸ்ட் மூலம் நீர் மூலக்கூறுகளை உடைத்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவினை பெறும் இவரது புதிய கண்டுபிடிப்பு உலகெங்கும் பெரிதும் ஈர்க்கப்பட்டு இன்று "செயற்கை ஒளிச்சேர்க்கை" துறையாக விரிவடைந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்க்ள் இத்துறையில் பணி புரிகின்றனர்.

இந்நுட்பத்தின் தொடர்ச்சியாக பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் சுவர் பூச்சுகள், நீர் விலக்குமை பூச்சுகள் மூலம் தானாகவே சுத்தம் செய்யும் சுவர்கள், சன்னல்கள் என பல புதிய நுட்ப பயன்பாடுகளை இவரது கண்டுபிடிப்பு வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ள்து.
வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசுப் பிரிவில் இன்று வரை விருது வெல்வதற்கான எதிர்பார்ப்பு பட்டியலில் உள்ளார். 75 வயதிலும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும் பேராசிர்யர் புஜிசிமா கடந்த ஆறு ஆண்டுகளாக தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும், சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் மையத்தின் இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.
இவரது நெறியாழ்கையின் கீழ் இரண்டு ஆண்டுகள் ஜப்பானின் ஜே.எஸ்.பி.எஸ் விருதாளராக பணியாற்றியது என் வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பேறு என்றே சொல்வேன்.
பேரா. புஜிசிமா இன்னும் பல ஆண்டுகள் பூரண உடல் நலத்துடன் அறிவியல் உலகிற்கு வழிகாட்டுதலை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

One of the world renowned researchers, and our beloved teacher Prof. Akira Fujishima, President of Tokyo University of Science, Director of International Photocatalysis Research Center has been received great honour “Order of Culture Merit” from Emperor of Japan.
The Order of Cultural Merit is a decoration that is given to people who have shown significant achievements in the development of culture in Japan.
In this context, Prof. Fujishima’s outstanding contribution and Innovation on several scientific fields including photoelectrocatalytic water splitting, antimicrobial coatings, and self-cleaning surface topics has been recognised for this merit. His ground breaking discovery on “photoelectrocataytic water splitting” triggering the new research fields “artificial photosynthesis” and “Photocatalytic water treatment”. Thousands of reserachers are currently working in these fields towards to solve the global energy crisis and environmental pollution issues.
On the other hand, Prof. Fujishima’s innovation generate 65 billion Japanese yen worth industrial business in Japan. This explains the impact of his research work in humanity applications.
My hearty congratulation to Prof. Fujshima for receiving the “Order of Merit” award and wish him to guide Japan scientific community with good health.







 

No comments:

Post a Comment