Monday 25 January 2016


ஜப்பானில் சமச்சீர் வழி கல்வி புத்தகங்கள்


ஜப்பானில் தோக்கியோ நகரில் உள்ள நிசிகசாய் (Nisi Kasai), தொக்காய் சீபா (Thokaishiba) பகுதியில் வார இறுதியில் முழுமதி அறக்கட்டளை சார்பில் தமிழ் வகுப்புகள் நம் தமிழ் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மழலை செல்லங்கள் தோக்கியோ நகரில் உள்ள சர்வதேச பள்ளியில் பயிலுகிறார்கள்.ஆனால் நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியினை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல நல்ல தமிழ் புத்தகங்கள் தேடி வந்த வேலையில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சமச்சீர் பாடக் கல்வி புத்தகத்தினை  வாங்கி தரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக இந்தியாவில் இருந்து ஒன்றாம் வகுப்பு சமச்சீர் வழி கல்வி தமிழ் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு நம் செல்வங்களுக்கு கொடுக்கப்பட்டது.

 அதனை வாங்கி பார்த்து விட்டு அவர்கள் அடைந்த் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

தமிழ்  மொழி மட்டுமல்ல அது நம் அடையாளமும் கூட‌..

நிசிகசாய் தமிழ் பயிற்சி வகுப்பில் சமச்சீர் வழி தமிழ் புத்தகங்களை ஏந்திக் கொண்டிருக்கும் மழலை செல்லங்கள்.




No comments:

Post a Comment