Sunday 31 January 2016

நண்பர்களுடன் கலகலப்பாய் இருக்கும் பிறந்த நாள் பொழுதானது கல்லூரி காலம் தொட்டு விரிவடைந்து, சின்ன சின்ன நினைவு திட்டுகளாய் நெஞ்சில் எப்போதும் உவப்பாய் நிலைத்திருப்பவை .

திருமணத்திற்கு பிறகு பிறந்த நாளானது மனைவியிடம் இருந்து கிடைக்கும் சஸ்பென்ஸ் பரிசுகள் என வேறுதளத்திற்கு தாவி இருந்தது.

இந்த பிறந்த நாள் வித்தியாசமாக இருந்தது.
என் தனிப்பட்ட நட்பு வட்டத்தினையும் தாண்டி நான் பார்த்திராத நண்பர்கள் பலரும் அனுப்பியிருந்த‌ அன்பு கலந்த வாழ்த்துகளால் முகநூல் உள் பெட்டி நிறைந்து இருந்தது. நண்பர்களின் வாழ்த்துகளால் திக்கு முக்காடி போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்த பால்ய நண்பர்கள், ஆய்வு நண்பர்கள், பேராசிரியர்கள், ஊடக நண்பர்கள், முக நூல் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் என் இதய பூர்வமான நன்றிகள்.

முடிந்த வரை எல்லோருக்கும் தனித் தனியே நன்றி செய்தியினை அனுப்பி விட்டேன். யாருக்கேனும் விடுபட்டிருந்தால் என் நன்றிகள் உரித்தாகுக.

வீடு திரும்பும் பறவையென நேற்று பெல்பாஸ்டு நகரில் இருந்து சுவான்சி நகருக்கு ஓடி வந்தேன். வீட்டு கதவை திறந்தவுடன் ஊருக்கு போயிருந்த என் குட்டி தேவதை அவந்தி ஓடோடி வந்தென்னை தழுவிக் கொண்டாள்.

டாடி கண்ணை மூடு என்ன சொல்லி விட்டு வீட்டிற்குள் ஓடியவள் தான் கிறுக்கிய வண்ண தாளை கொண்டு வந்து பரிசாய் கொடுத்தாள்.

இந்த பிறந்த நாளுக்கு இதைவிடவும் பெரிய பரிசாய் வெறென்ன வேண்டும்.

"பிரிவுகள்தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன‌" என்னும் யுக பாரதியின் கவிதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

Hearty thanks to all my dear friends for your birthday wishes. You made my day special.

No comments:

Post a Comment