Wednesday 24 August 2016

 இன்று புதன்கிழமை காலை இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் 6.2 ரிக்டர் அளவிற்கு கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தினால் அமட்ரிசு (Amatrice) என்னும் நகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரம் இத்தாலியின் தலை நகரமான ரோம் நகரில் இருந்து கிழக்கு எல்லையில் சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வரலாற்று ரீதியில், மிகவும் பழமைவாய்ந்த இந்நகரின் புராதன‌ கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவை பெருமளவில் சேதாரமாகி உள்ளது. கட்டிட‌ இடிபாட்டிற்குள் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் விரைந்து மீட்டு வருகின்றனர். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டை இழந்தை தெருவில் உயிர் பயத்தோடு நிற்கின்றனர்.
இந்த துயர சம்பவத்தில் இது வரை 73 பேர் இறந்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மோப்ப நாயின் உதவியுடன் கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை தேடி வருகிறார்கள்.
நெகிழ்ச்சியான வேண்டுகோள்:
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளி உலகை தொடர்பு கொள்ள ஏதுவாக அப்பகுதியில் இணைய வசதி வைத்திருப்பவர்க்ள் தங்கள் வைபை இணைப்பிற்கான கடவுச்சொல்லை நீக்கி வைக்குமாறு செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்)

இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பவும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் அனைவரும் வரும் நலத்துடன் திரும்ப பிராத்தனை செய்வோம்.
Lets pray for Amatrice, Italy to get back to normal life.

**Siate forti , noi siamo con voi

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமட்ரிசு நகரம்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள் வரைபடத்தில் குறியிட்டு காட்ட்பப்பட்டுள்ளது

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமட்ரிசு நகரம்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வைபை வசதிக்கான கடவுச் சொல்லை நீக்க கோரி விண்ணப்பம்




No comments:

Post a Comment