Sunday 21 August 2016


திரைப்படங்களில் பலரும் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே திரையில் வாழ்கிறார்கள். அவ்வாறு திரையில் வாழும் நடிகர்களில் நான் பார்த்து வியந்த ஒரு மகா கலைஞன் திரு கமல ஹாசன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை அர்பணித்துக் கொள்ளும் இராட்சசன். அதற்கான உடலை வருத்தும் எந்த மெனக் கெடலையும் செய்ய துணிந்தவர்.

இலக்கியத்தில் தீராத காதலையும், அது சார்ந்த நண்பர்களையும் எப்போதும் பேணத் தெரிந்த கவிதா ரசிகன்.

சம காலத்தில் இந்திய சினிமா துறையில் நடிப்பு கலையோடு, நுட்பம் சார்ந்த புதிய முயற்சிகளை வேறு வேறு பரிமாணங்களில் தரும் கமலின் அர்பணிப்பு என்னை பிரமிக்க வைப்பவை.

தன் குருவின் வழியில் இவருக்கும் பிரான்சு தேசத்து செவாலியே விருது கிடைத்திருப்பது இந்திய சினிமாவிற்கு பெரும் கெளரவம்.

என்றும் இதே இளமையோடும், துள்ளலோடும் உங்கள் கலையுலக பாதையில் பயணிக்க ஒரு அன்பு ரசிகனாக வாழ்த்துகிறேன்.





No comments:

Post a Comment