Monday 12 March 2018


பிரித்தானியா அறிவியல் வாரம்

பிரித்தானியா அறிவியல் வார (British Science Week) நிகழ்வின் ஒரு பகுதியாக வேல்சு அரசின் (Welsh Government) அமைச்சக ஊழியர்களுக்கு எமது ஆராய்ச்சியினை விளக்கும் பொருட்டு அழைப்பிதழ் கிடைத்தது.

வேல்சு அரசின் தலைமை அலுவலக வளாகத்தில் அமைச்சக ஊழியர்களுக்கு சுவரொட்டி மூலம் எமது ஆராய்ச்சி பணிகள் குறித்து விளக்கினேன் குறிப்பாக சூரிய ஒளி ஆற்றம் மற்றும் வினையூக்கிகள் அடிப்படையிலான செயற்கை ஒளிச்சேர்க்கை நுட்பம் குறித்து விளக்கினேன். .

இது போன்ற அறிவியல் விழிப்புணர்ச்சி நிகழ்வுகள் மூலம் நேரடியாக அமைச்சரக ஊழியர்களுக்கு விளக்கும் போது துறை சார் நுட்பங்களில் புதிய வளர்ச்சியினைப் பற்றி தெரிந்து கொள்வதோடு,, அதுசார்ந்து திட்டங்களில் புதிய வரைவுக் கொள்கைகளை (policies) கொண்டு வரவும் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அதே நேரம் என்னைப் போன்ற அறிவியலாளர்களுக்கு அரசுடன் இணைந்து செயல்படுவதோடு, தொழிற்துறை நிறுவனங்களுடன் நேரடியாக இணைந்து அவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சியினை முன்னெடுக்கவும் எளிதாக இருக்கும்.

இன்றைய நிகழ்வினை ஒருங்கினைத்த Ser Cymru-II குழுவினருக்கு நன்றியும், பாராட்டுகளும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
மார்ச் 12,2018






No comments:

Post a Comment