Saturday 26 December 2015

பேரிடர் மேலாண்மை கல்வி - ஜப்பான் தரும் நம்பிக்கை ‍- 2
(பாரதியின் நினைவுகளோடு எழுவோம்)

சென்னையின் தெருக்கள் எங்கும் வெள்ள சீர்கேட்டால் ஏற்பட்ட இராட்சத குப்பைகள், சாக்கடை கழிவுகள், இடிந்த வீடுகள், வாகனங்கள் என எங்கு நோக்கிலும் குப்பை காடாய் காட்சி அளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றதோடு இல்லாமல், இன்னும் சில இடங்களில் நீர் வடியாமல், சேறும் சக்தியாக காட்சியளிக்கிறது.

இரண்டு இடங்களிலும் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து தெருக்களில், கிடைக்கும் பொது இடங்களில் கொசுக்கடியில் தங்கி இருக்கின்றனர். எப்படி தங்கள் வாழ்வினை மீண்டும் மீட்கப் போகிறோம் என்கிற துக்கத்தில் துவண்டுள்ளனர்.

குடியிருப்பு, சாலைகள், நீர் நிலைகள் என இவற்றிற்கான‌ புணரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு என்பது நமக்கு இடப்பட்ட மிகப் பெரிய சவால் ஆகும்.

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு மார்ச 11 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றூம் சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட நகரங்கள் மக்களின் ஒத்துழைப்போடு மூன்றே மாதத்தில் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

ஆகையால் சென்னை மாநகரையும், கடலூரையும் மக்கள் ஒன்றிணைந்து மீள் கட்டமைப்பு செய்து அவர்களின் துயரை துடைக்க முடியும்..

இந்த மீள் கட்டமைப்பு பணியில் அரசு, தன்னார்வகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், என எல்லாதரப்பும் போர்கால அடிப்படையில் இயங்கினால் நிச்சயம் நம் பழைய நிலைமையினை மீட்டெடுக்க இயலும்.

பாரதியின் இந்த பிறந்த நாளில் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற‌ அவன் வார்த்தைகளில் புத்தெழுச்சியுடன் இந்த இடரில் இருந்து மீண்டு வருவோம்




பேரிடர் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களிடம் இருக்க வேண்டியவை

2011 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி ரிக்டர் 9 அலகில் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் வரிசையாக நின்று குடிநீர் வாங்கும் காட்சி.
முறையாக வரிசையில் நின்று வாங்குவதால் எல்லா மக்களுக்கும் உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கிறது. வழங்குபவருக்கும் இந்த பணி எளிமையாகிறது. ஒரு பேரிடர் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஜப்பானிய மாணவர்களுக்கு சிறு வயதில் பள்ளியில் சொல்லி தருகிறார்கள். இம்முகாம்களில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு மட்டும் வரிசையில் நிற்காமல் வாங்கிட சலுகை உண்டு. ஆனாலும் பல முதியவர்கள் வரிசையில் நின்றுதான் வாங்கி செல்வர்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு இதை சொல்லிக் கொடுப்போம்.

புகைப்படம் நன்றி : டெய்லி மெயில்

No comments:

Post a Comment