Thursday 31 December 2015


ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது -9


இன்று தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் தலைவரும் எனது பேராசிரியருமான அகிரா புசுசிமா அவர்கள், பல்கலைக் கழக மாணவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் புத்தாண்டு செய்தியினை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இவரது வயது 75, ஆயினும் நான் வியக்கிற சுறு சுறுப்பான இளைஞர். இவரை பற்றி எனது வலைப்பூக்கள் பக்கத்தில் நிறைய எழுதியுள்ளேன்.

இந்த புத்தாண்டு செய்தியில் என்ன சொல்லி இருக்கிறார் என படித்து பார்த்தேன்.

அ. பல்கலைக் கழக இளம் நிலை மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்டங்களை தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு மாற்ற வேண்டும். இதன் மூலம் உலகிற்கான தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம் (Global TUS) என்ற புதிய சவாலுடன் வெற்றி நடை போடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆ. மாணவர்களுக்கு தேவையான செறிந்த அறிவியல் நுட்பங்களை நம் தாய் மொழியில் பேராசிரியர்கள் எழுதிட வேண்டும். அவர்களது தனித்த ஆராய்ச்சி அறிவினை இளைய தலைமுறைக்கு எடுத்து செல்வதன் மூலம் நாம் அவர்களை நாட்டின் முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல முடியும். அதற்கான உதவிகளை பல்கலைக் கழகமே செய்து தரும். நம் புத்தகங்களை ஜப்பானின் பிற பல்கல்கலைக் கழகங்களும் ஏற்று படிக்கும் படி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இ. விஞ்ஞான உலகம் பெரிது, இதற்கான போட்டியில் நம் ஆய்வு மாணவர்களை தட்டி எழுப்ப  புதிய கொள்கைகளை நாம் நிறுவ வேண்டும், நவீனப்படுத்தப்பட்ட உபகரணங்களை பல்கலைக் கழகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் ஆய்வு மாணவர்களுக்கு எதிர் காலத்தில் வேலை வாய்ப்பினை உறுதி செய்ய இயலும்.

ஈ. பல்கலைக் கழகத்தின் உயர் சமூக மதிப்பீடு மற்றும் மாணவர்களின் தகுதித் திறமையுனை மேலும் வளர்ப்பதே இந்த வருடத்திய சவால் இதற்கான பணியில் உங்களோடு சேர்ந்து செயலாற்றிட காத்திருக்கிறேன்.

இதுதான் அவரது செய்தியின் பிரதான அம்சம்.

ஜப்பான்காரன் வாயில் வடை சுட மாட்டன். சொன்னா செஞ்சிடுவான்.

நம் தமிழக பல்கலைக் கழகங்களில் எந்த‌ ஒரு துணை வேந்தராவது புத்தாண்டு செய்தி தந்துள்ளார்களா?. பல்கலைக் கழகத்தினை உயர்த்திட‌ எதிர்கால திட்டம் என்ற ஒன்றாவது இவர்களிடம் இருக்கிறதா.

நாம் நம் திசைகளை இழந்து வருகிறோமே என அஞ்ச தோன்றுகிறது.


New year wishes from Prof Fujishima, President of Tokyo University of Science, Japan


No comments:

Post a Comment