Saturday 26 December 2015

அடிப்படை அறிவியலை புரிந்து கொள்ளுங்கள்


தயவு செய்து, உங்கள் பாடத்திட்டத்தினை மாற்றுங்கள்.. குழந்தைகள் மதிப்பெண்ணை நோக்கி ஓடுவது இனியும் பயன் தராது.

எளிமையான கேள்வி. ஒரு கண அடி நீர் (cusec= cubic feet per sec) என்றால் எவ்வளவு நீர் இருக்கும் இது நீரின் எடையினை அளக்கும் அலகா அல்லது நீரின் ஓட்டத்தினை அளக்கும் அலகா என அடிப்படையே புரியாத அளவிற்கு தான் நம் கல்வி இருக்கிறது.

இது தெரிந்திருந்தால் பச்சை குழந்தை முதுகில் ஐம்பது கிலோ எடையுள்ள பொருளை வைப்பது எவ்வளவு பாவம் என அடையாற்றில் அதன் கொள்ளளவை மீறி 20 மடங்கு தண்ணிரை கமுக்கமாக திறந்துவிட்டு இன்னும் பாசாங்கு காட்டும் தமிழக அரசின் தந்திரம் புரியும்.

சரி ஒரு கன அடி நீர் என்றால் என்ன என்பதை இத்துடன் இணைத்துள்ள கட்டுரையில் தெளிவாக தமிழில் விளக்கி உள்ளனர். பேரிடர் காலத்திலாவது அடிப்படை எதார்த்த அறிவியலை படித்த்து தொலைவோம்.

படித்து விட்டு அடையாறின் கொள்ளளவு என்ன அதில் அரசு முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விட்ட நீரின் அளவு என்ன என்பதை முதலில் நன்கு புரிந்து கொண்டு பொது வெளியில் பேசுங்கள்.

ஒரு உண்மையினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் உள்ள ஏரியில் வீடுகள் ஆக்கிரமிப்பு பண்ணியதால் தான் இந்த வெள்ள சீரழிவு என்று பொது வெளியில் பலரும் பேசுவதை பார்க்க முடிகிறது

உண்மைதான் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால், சென்னையில் எக்மோர், சைதாபேட்டை, கோடம்பாக்கம் இவையெல்லாம் ஏரியியின் நடுவிலா இருக்கிறது.

இங்கே உள்ள பகுதிகளில் இரண்டாவது தளத்திற்கு வரை தண்ணீர் ஓடியுள்ளது. இங்கு வாழ்ந்த ஏழை, நடுத்தர, பணக்காரர்கள் என எல்லா தரப்பு மக்களும் வீடிழந்து நொந்து போய் உள்ளனர்.ஆகையால் எதனால் சென்னைக்கு இந்த வெள்ளக் கேடு வந்தது என புரிந்து கொண்டு பேசுங்கள்.

அடுத்த கேள்வி ஒரு. மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால் என்ன அர்த்தம். அதை எப்படி புரிந்து கொள்வது..முதலில் மேலே கேட்ட கேள்வியினை புரிந்து கொள்ளுங்கள் அப்புறம் மீண்டும் வருகிறேன்.


No comments:

Post a Comment