Monday 29 May 2017

புறக்கணிக்கப்படும் அசைவ பட்சினிகள்
----------------------------------------------------------

அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் 8900 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து கிடக்கிறது எல்லொஸ்டோன் (Yellowstone national park) தேசியப் பூங்கா. இதுவெ உலகின் முதல் தேசியப் பூங்காவாகும்.

திடீரென்று இந்த தேசியப் பூங்காவின் பல்லுயிர் பெருக்கம் சரியத் துவங்கியது. காரணம் இங்கிருக்கும் புல், சிறு செடி என அனைத்து தாவரங்களையும் தின்று காலி செய்த எல்க் (Elk) என்னும் ராட்சத மான்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதே.

ஏன் இவை கட்டுக்குள் இல்லாத அளவிற்கு பெருகியது?
எல்க் ராட்சத மான்களை தொடந்து கட்டுக்குள் வைத்திருந்த அசைவ பட்சினியான‌ ஓநாய்களை அப்பகுதியில் வாழ்ந்த கொயேட் என்னும் குள்ளநரிகள் கொல்லத் துவங்கியதால் ஏற்பட்ட தலைவலியே.

பிறகு, 1995 ஆம் ஆண்டு இந்த காட்டில் ஓநாய்களை மீண்டும் வனத்துறையினர் இப்பகுதியில் அறிமுகபப்டுத்தினர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி படி, எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் மான்களின் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது, அதனால் சிறு தாவரங்கள் தொடங்கி அதன் வாயிலாக வளரும் புழு, பூச்சிகளை அவற்றை உண்ணும் பறவைகள், நீர் நாய்கள் என எல்லோஸ்டோன் தேசிய பூங்காவின் பல்லுயிர் பெருக்கம் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தும் வகையில் மீட்டெடுக்கப்பட்டது.

இது சார்ந்து நியூசம், எல்லிட் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் நெடிய‌ ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவுகளை ஜர்னல் ஆல் எகாலஜி என்னும் சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டார்கள் (Thomas M. Newsome, William J. Ripple. A continental scale trophic cascade from wolves through coyotes to foxes. Journal of Animal Ecology Volume 84, Issue 1, pages 49–59, January 2015). http://onlinelibrary.wiley.com/wol1/doi/10.1111/1365-2656.12258/abstract

மான்கள் பார்க்க சாது என நினைத்து காடு முழுவதும் மான்கள் இருந்தால் விரைவில் வனம் அழியும் என்பது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்.
.
அதைப் போலவே சைவ, அசைவ பட்சிகளின் தகவமைப்பு என்பது சூழலியலின் சங்கிலியில் ஒன்றோடொன்று பின்னி பிணைக்கப்பட்டவை. ஆகையால் மிகையாக‌ சைவ‌ சித்தாந்தம் பேசி சூழலியல் சங்கிலியின் ஒரு முனையின் அறுத்தெறிந்தால் விளைவு அதை அறுப்பவர்களுக்கே எதிராய் முடியும்.

நம் தனிப்பட்ட இறை நம்பிக்கைகளைத் தாண்டி எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையின் தகவமைப்பு சூழல் படியே வளர்கிறது. அசைவம், சைவ சிந்தாந்தங்களை தாண்டி சுற்று சூழலியலை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

அசைவப் பிரியர்கள் விலங்குகள் வதை செய்கிறார்கள் என்று உங்கள் மனம் நம்பத் தொடங்குமானால், பசுவின் கன்று பாலை திருடி கெட்டி தயிர் போட்டு லஞ்ச சாப்பிடுவதை நிறுத்துங்கள்.










No comments:

Post a Comment