Monday 22 June 2015


சூரிய மின் உற்பத்தி செய்யும் மாடுகள் (Cow mount solar system)


இனிமே உங்கள வீட்டுல மாடு மேய்க்கதான் லாயக்குன்னு திட்டுனா சந்தோசப்படுங்க.

ஆமாங்க மாடு மேய்க்கும் போதே சூரிய மின் சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் ஜெர்மனியில் சோதனை முறையில் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பெயர் Cow-Orientation Network (CON). அதாவது புல்வெளிகளில் மேயும் மாடுகளுக்கு முதுகில் அதிக கனமில்லாத சோலார் பேனல்கள் மாட்டி அதிலிருந்து மின் ஆற்றலை தயாரிக்கலாம். 

இந்த சோலார் பேனல்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தினை பேட்டரி, வயர் இல்லாமல் மைக்ரோவேவ் (microwave) நுட்பத்தின் மூலம் மின்சாரமாக மாற்றி பண்ணை செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம் அல்லது  அவற்றினை அருகில் உள்ள மின் நிலையங்களின் மின்சார தடத்தில் ஏற்றுமதி செய்யலாம் 

ஏன் பாஸ் பாவம் இந்த மாடுங்க, இது மேல இந்த சோலார் பேனல வச்சு கஸ்டப்படுத்தறதுக்கு பதிலாக வேலி ஓரம் வச்சா என்ன பிரச்சினைன்னுதான கேட்கறீங்க?

Cow mount solar power system. (PhotoCredit: www.reenergisegroup.com)

இரண்டு விசயத்த இதுல பாசிட்டிவா பார்க்கலாம். ஒன்று சோலார் பேனல்  வைக்கும் தாங்கு கம்பிகளுக்கு (solar panel mounting structure) ஆகும் செலவு மிச்சம்மற்றொன்று சூரியனின்  பாதைக்கு பக்க வாட்டில் அல்லது எதிர் திசையில்  சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே  புல் மேயும்போது ஒரே இடத்தில் தரையில் சோலார் பேனல்களை பொருத்தி  (static structure)  பெறும் மின்சாரத்தினை விட அதிகமான மின்சக்தியினை இந்த நடமாடும் மாடுகளின் மீது பொறுத்தப்படும் சோலார் பேனல்களில் இருந்து உற்பத்தி ஆகும்.

அதாவது இதே செயலை தரையில் பொறுத்தியுள்ள சோலார் பேனல்களில் செய்ய வேண்டுமானால் சூரியனின் திசையினை தொடர்ந்து  நகரும்  சோலார் டிராக்கர்கள் (solar trackers) எனப்படும் கருவி பொருத்த மிகப் பெரும் செலவு ஆகும். ஆகையால் இந்த நடமாடும் சோலார் பேனல்கள் ஒரு விதத்தில் அதிக மின்சக்தியினை உற்பத்தி செய்யும். 

சோலார் பேனல்களின் எடை மாடுகள் சுமக்க கூடிய வகையில் எளிமையான ஒன்றுதான், ஆகையால் மாடுகளுக்கு சிரமமாக இருக்காது. 


இந்த திட்டத்தின் மாதிரி வடிவம் (Cow-Mount mobile Solar PV installation) ஜெர்மனியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு சந்தைக்கு வர உள்ளது.
தற்போது புற்கள் தோட்டத்தினை  கிழக்கு மேற்காக வளர்த்து அதில் மாடுகள் விடும்போது மிக அதிகமான சோலார் போட்டான்கள் சூரியனிடமிருந்து  பெறலாம் எனக் கணித்துள்ளனர். அதற்கான வேலைகள் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகின்றது.

பாட்டரியும், வயரும் இல்லாமல் எப்படி மாட்டின் மீது பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனலில் இருந்து மின்சக்தியினை சேமிக்க முடியும்.

சோலார் பேனல்களில் இருந்து பெறப்படும் DC மின்சக்தியினை மைக்ரோஅலைகளாக  கம்பியற்ற முறையில் கடத்தி தொலைவில் உள்ள ரீசிவர் மூலம் AC மின்சாரமாக  மாற்றி  பயன்படுத்தும் ஆராய்ச்சி  தற்போது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நுட்பம்தான் இங்கு பயன்படுத்தப்படுகிறது


இதில் உள்ள சிக்கல் இந்த மைக்ரோஅலைகள் நுட்பம் குறைந்த தூரம்தான் நன்கு திறனுடன் வேலை செய்யும். அதனால் என்ன, மாடுகளில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யோக இன்வெர்ட்டரில் இருந்து DC மின்சாரம்  மைக்ரோ அலைகளாக (microwave) மாற்றம் செய்யப்பட்டு AC மின்சாரமாக குறைந்த தூரத்தில் உள்ள புல்வெளி தோட்டத்தின் வேலியில் அமைக்கப்பட்டுள்ள  மின் நிலையங்களின் மின்சார தடத்தில் ஏற்றுமதி செய்யலாம். 

குறுகிய தொலைவிற்குள்  இந்த microwave conversion into AC current சாத்தியமாகும் என்பதால் எதிர் காலத்தில் மிகப் பெரும் சந்தை வாய்ப்பு Cow-Orientation Network (CON) திட்டத்திற்கு உள்ளது

சூரிய ஆற்றல் மூலம் மாடு மேய்க்கும் ஜிபிஎஸ் நுட்பம்


அமெரிக்காவில் உள்ல எம் ஐ டி (MIT - Massachusetts Institute of Technology) கல்வி நிறுவனமும், விவசாயத் துறையும் (Department of Agriculture, USA) இணைந்து நிழல் வேலிகள் (virtual fencing) எனப்படும்  வேலியற்ற முறையில் மாடு மேய்ப்பதற்கான புதிய நுட்பத்தினை சூரிய மின் ஆற்றல் மூலம் சாதித்து காட்டியுள்ளனர்.

 சூரிய ஆற்றலில் இயங்கும் ஜிபிஎஸ் நுட்ப கருவிகள் மாட்டின் தலையில் தொப்பியாக மாட்டப்பட்டுள்ளது.


 சூரிய ஆற்றலில் இயங்கும் ஜிபிஎஸ் நுட்ப கருவிகள் மாட்டின் தலையில் தொப்பியாக மாட்டப்பட்டுள்ளது.

இந்த நுட்பத்தின் மூலம் மாடுகள் மேய்க்க ஆட்கள் தேவை இல்லை, மேலும் மாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் மேய்வதற்கான கம்பி வேலிகளும் (fencing) தேவை இல்லை.

மாடுகளின் தலையில் சிறிய ரக சோலார் பேனல்கள் பிரத்யோகமாக தொப்பியாக மாட்டப்பட்டுள்ளது. இதில்  கிடைக்கும் மின் சக்தியினை கொண்டு இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவியினை இயக்குகிறது. இதன் மூலம் மாடு நமது எல்லைக்குள் மேய்கிறதா என நம் இடத்தில் உள்ள சர்வர் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை மாடுகள் எல்லைக்கு வெளியில் மேயச் சென்றால் இது சர்வரை (computer server) தொடர்பு கொண்டு அறிவுறுத்தும் சிக்னலை பெற்று மாட்டின் தலையில் சோலார் பேனலோடு இணைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கி கருவியின் மூலம் குறிப்பிட்ட ஒலியினை எழுப்பி மாடு பழைய படி பயந்து கொண்டு நமது எல்லைக்குள்ளே வந்து விடும்.அப்படியும் மசியவில்லை எனில் மெலிதான எலக்ட்ரிக் அதிர்வை மாட்டுக்கு செலுத்தும். அப்புறம் என்ன மாடு தெறித்து கொண்டு பழைய இடத்துக்கே ஓடி வந்திடும். 

எனவே இனி வங்கிக்கு போய் மாட்டு லோன் வாங்குவதாக இருந்தால்  சோலார் பேனல்கள் வாங்கறதுக்கும் ஒரு திட்டத்த போடுங்க பாஸ். 

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிடலாம்

No comments:

Post a Comment